அழுகிய நிலையில் சடலமாக மருத்துவர் மீட்பு

தனியார் மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் பெர்பெத் அழுகிய நிலையில் சடலமாக மீட்டது குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் விசாரணை மோற்கொண்டு வருகின்றனர்.
மானாமதுரை சேர்ந்த 53 வயதான மருத்துவர் சுரேஷ் பெர்பெத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ராஜக்காபட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொது மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். மருத்துவமனை அருகே வாடகைக்கு குடியிருந்து வருகிறார். மருத்துவர் குடியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தாடிக்கொம்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது மருத்துவர் சுரேஷ் பெர்பெத் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.மேலும், மருத்துவர் இறப்பு குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Tags

Next Story