குடியாத்தம் அருகே குறுக்கே வந்த நாய்: இருவர் மீது மோதிய ஆட்டோ

குடியாத்தம் அருகே குறுக்கே வந்த நாய்: இருவர் மீது மோதிய ஆட்டோ

ஆட்டோ மோதும் வீடியோ

குடியாத்தம் அருகே இருவர் மீது ஆட்டோ மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப்பேட்டை பஜார் பகுதியில் வீட்டின் அருகே சதீஷ் என்பவரும் ராஜேஷ் என்பவரும் பேசிக் கொண்டிருந்தனர்.அப்பொழுது சாலையில் ஆட்டோ வேகமாக வந்து கொண்டிருந்தது.

அப்போது சாலையில் எதிரே நாய் ஒன்று குறுக்கே வந்ததால் நாய் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை ஓட்டுநர் திருப்பிய நிலையில் நிலை தடுமாறி வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்த இருவர் மீது ஆட்டோ மோதியது.

இதில் வீட்டின் அருகே நின்று பேசிக் கொண்டிருந்த இருவருக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பிய நிலையில்,அந்த விபத்தின் பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Tags

Next Story