திருப்பூரில் பிரபல ஓட்டலில் சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பரபரப்பு!

திருப்பூரில் பிரபல ஓட்டலில் சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் பிரபல ஓட்டலில் வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் ரெயில் நிலையம் அருகே பிரபல சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. தினமும் காலை, மதியம், மாலை, இரவு என எப்போதும் இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் பலரும் உணவு உண்பதும், பலகாரங்கள் வாங்கி சாப்பிட்டும் செல்வார்கள். இந்நிலையில் நேற்று திருப்பூரில் எல்.ஐ.சி. முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முகவர்களுக்கு உணவகத்தில் மதியம் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது கோகிலா என்பவருக்கு சாப்பாடு வைத்த பின்னர் சாம்பார் பரிமாறப்பட்டது. அப்போது சாம்பாரில் கரப்பான் பூச்சி கிடந்தது. இதனை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் உணவகத்தின் நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தார். ஆனால் அவர்கள் அதனை பெரிதாக கருதிக்கொள்ளாமல் சாம்பார் மற்ற மேஜைகளில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களுக்கும் பரிமாறிக்கொண்டிருந்துள்ளனர். இதனால் கோபமடைந்த முகவர்கள் அனைவரும் உணவக நிர்வாகத்தினரிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து உணவருந்தாமல் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story