வெற்றிலை பாக்கு வைத்து வாக்கு சேகரிக்கும் விவசாயி

வெற்றிலை பாக்கு வைத்து வாக்கு சேகரிக்கும் விவசாயி

தேர்தல் பிரசாரம் 

தூத்துக்குடி தாெகுதியில் போட்டியிடும் விவசாயி கோ.கண்ணன் என்பவர் வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
டைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கோ.கண்ணன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் இன்று கோவில்பட்டி நகர் பகுதியில் பொதுமக்கள், தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு தரப்பினரிடமும் தனது சின்னமான டில்லர் கலப்பைக்கு வாக்கு சேகரித்தார். தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி தலைமையில் வேட்பாளர் கோ.கண்ணன் தனது தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரத்துடன் வெற்றிலை பாக்கு வைத்து விவசாயிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story