மருத்துவமனையில் இருக்கும் மகளை பார்க்க சென்ற தந்தை விபத்தில் பலி

மருத்துவமனையில் இருக்கும் மகளை பார்க்க சென்ற தந்தை விபத்தில் பலி
சாலை விபத்து 
ஆலங்குளம் அருகே மருத்துவமனையில் இருக்கும் மகளை பார்க்க சென்ற தந்தை இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள குத்தப்பாஞ்சான், தெற்குத் தெருவைச் சோ்ந்த முத்துராஜ் மகன் வேல்துரை (30). இவரது 4 வயது மகள் நீரில் தவறி விழுந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு புதுப்பட்டியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். இதனிடையே, வீட்டுக்கு தாமதமாக மது போதையில் வந்த வேல்துரை, மகளின் நிலை குறித்து கேள்விப்பட்டாா். அவா் உறவினரான காமராஜ் மகன் முத்து (20) என்பவரை அழைத்து, பைக்கில் புறப்பட்டாராம். ஆனால், புதுப்பட்டிக்குச் செல்லாமல் ஆலங்குளம் வந்தாராம். ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள கல்லறைத் தோட்டம் அருகே முன்னால் சென்ற காரை பைக் முந்த முயன்றுள்ளார். அப்போது, இந்த பைக்கும், எதிரே ஆலங்குளம் குத்தாலம் மகன் வெற்றிவேல் ஓட்டி வந்த பைக்கும் மோதினவாம். இதில், வேல்துரை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். முத்து லேசான காயமடைந்தாா். விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story