வெள்ளமடம் அருகே கையுறை கம்பெனியில் தீ விபத்து 

வெள்ளமடம் அருகே கையுறை கம்பெனியில்  தீ விபத்து 
தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள்
வெள்ளமடம் அருகே கையுறை கம்பெனியில் மின்கசிவால் தீ விபத்து - போலீசார் விசாரணை.
குமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே சகாய நகரில் கையுறை கம்பெனி குடோன் உள்ளது. இங்கு கையுறைகளை பேக்கிங் செய்வதற்காக ஏராளமான அட்டைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் குடோனில் உள்ளே இருந்து திடீரென கரும்புகை வந்தது. இதை கண்ட காவலாளிகள் நிர்வாகத்திற்கும், நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குடோனில் ஏராளமான அட்டைப்பட்டிகள் இருந்ததால் கரும்புகை அதிக அளவு உருவாகி, சுற்றுப்பகுதியில் பரவியது. உள்ளே செல்ல முடியாத அளவிற்கு தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இருந்தாலும் கடுமையாக போராடி தீயினை முற்றிலும் அணைத்தனர். ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

Tags

Next Story