மேட்டூர் அருகே பிளைவுட் கடையில் தீ விபத்து

மேட்டூர் அருகே பிளைவுட் கடையில் தீ விபத்து

தீக்கு இரையான பொருட்கள்

சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே நாட்டாமங்கலத்தில் பிளைவுட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

மேட்டூர் அருகே நாட்டாமங்கலத்தில் ஜோதிமணி (35) என்பவர் பிளைவுட் கடை நடத்தி வந்தார். இரவு வேலை முடிந்து கடையை பூட்டிவிட்டு ஜோதிமணி வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு 11 மணியளவில் பிளைவுட் கடையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது .

அருகில் இருந்தவர்கள் உடனடியாக மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த இயந்திரங்கள், டேபிள், சேர் உள்ளிட்ட 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எறிந்து சேலம் அடைந்தது.

நள்ளிரவு நேரம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சமூவன் தொடர்பாக மேட்டூர் போலீஸ் விசாரணை நடத்தினர் .மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Tags

Next Story