சாத்தூரில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து

சாத்தூரில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

சாத்தூரில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார். மதிமுக கட்சியை சேர்ந்த அவர் சாத்தூர் நகராட்சியில் வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில் சாத்தூரில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் அருகில் கணேஷ்குமாருக்கு பாத்தியப்பட்ட கடையை புதுசூரங்குடியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் குத்தகைக்கு எடுத்து பூஜை பொருள் விற்பனை மற்றும் டீ கடை கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் மாரியப்பன் நேற்று இரவு கடையை வியாபாரத்தை முடித்து கடையை அடைத்து விட்டு சென்று உள்ளார். இந்த நிலையில் மாரியப்பனின் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் நேற்று இரவு மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற காவல் துறையினர் பூஜை பொருள் விற்பனை செய்யும் கடை இருந்து புகை வருவதை பார்த்ததை அடுத்து உடனடியாக சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் கடையின் பூட்டை உடைத்து போராடி தீயை அணைத்தனர்.

மேலும் தீ அருகில் உள்ள டீக்கடைக்கு பரவாமல் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த தீ விபத்தில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பூஜை பொருட்கள் முற்றிலுமாக இருந்து சேதமடைந்தன மேலும் இந்த விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story