டயர் கடையில் ஏற்பட்ட தீ விபத்து

டயர் கடையில் ஏற்பட்ட தீ விபத்து

தீ விபத்து

சாணார்பட்டி அருகேயுள்ள கோபால்பட்டியில் டயர் கடையில் தீப்பற்றி பொருட்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள கோபால்பட்டி - திண்டுக்கல் பிரதான சாலையில் பழக்கடைகள், காய்கறி கடைகள், உணவகங்கள், வாகன உதிரிபாகன கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளது. இந்த கடையில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கம் மற்றும் டயர் டீப், மோட்டார் சைக்கிளுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பின்னர் திங்கட்கிழமை காலை சுமார் 6 மணி அளவில் திடீரென கடையின் உள் பகுதியில் இருந்து புகை வந்ததை கண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பழனியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பழனியப்பன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது கடையில் உள்ளே டயர், டியூப், கம்ப்ரஸர், மோட்டார் சைக்கிள் மற்றும் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்து மளமள என்று எரிய தொடங்கியதால் அதிர்ச்சியடைந்தார். தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்து அக்கம்பக்கத்தில் மேலும் பரவாமல் தடுத்தனர்.

Tags

Next Story