ஓமலூர் அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து

ஓமலூர் அருகே தேங்காய் நார் தொழிற்சாலையில் தீப்பிடித்து பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தேங்காய் நார் சேதம்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் கலர்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தேங்காய் மட்டையிலிருந்து நான் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மின் கசிவு காரணமாக அவரது தேங்காய் நார் தொழிற்சாலையில் எதிர்பாராமல் தீப்பிடித்து உள்ளது. இதையறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் உரிமையாளர் மோகன்ராஜிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த உரிமையாளர் விரைந்து வந்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் தீயை அணைக்க முற்பட்டுள்ளார். ஆனால் அந்த முயற்சி வீண் போனதால் உடனடியாக ஓமலூர் தீயணைப்பு துறை எனக்கு தகவல் கொடுத்தார். தகவலை அறிந்த ஓமலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்பாபு உடனடியாக வந்து வீரர்கள் உதவியுடன் சுமார் 4 மணி நேரம் போராடி தேங்காய் நார் தொழிற்சாலை பிடித்து அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொழிற்சாலையில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story