மேட்டூரில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து

மேட்டூரில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து

தீப்பற்றி எறிந்த லாரி

சேலம் மாவட்டம் ,மேட்டூரில் வைகோல் கட்டுகள் ஏற்றி சென்ற லாரி மின் கம்பியில் உரசி தீ விபத்து ஏற்பட்டது.

மேட்டூர் அருகே கருப்புரெட்டியூரில் வைக்கோல் கட்டுக்கள் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீ விபத்து ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் இருந்து விற்பனைக்காக வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மேட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை ஆகாஷ் (24) என்பவர் ஓட்டி வந்தார்.

வைக்கோல் லாரி மேட்டூர் அருகே கருப்பு ரெட்டியூர் வந்தபோது மின் கம்பியில் உரசியதில் வைகோலில் தீ பற்றி மள மள வென எரிய தொடங்கியது. லாரியை அருகில் உள்ள தங்கமணி என்பவரது தோட்டத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுனர் ஆகாஷ் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினார். தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீச்சி அடித்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரியில் இருந்த வைக்கோல் மற்றும் லாரியின் முன்பகுதி தீயில் எரிந்து சேதம் அடைந்தது.

எரிந்து போன வைக்கோல் கட்டுகளின் மதிப்பு ரூபாய் 50,000 இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். தீ விபத்து குறித்து கருமலை கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story