பூந்தமல்லி அருகே தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து

பூந்தமல்லி அருகே தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து

தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாகம்

பூந்தமல்லி அருகே தனியார் வணிக வளாகத்தில் மின்சாதன பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

குமணன்சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது இந்த வளாகத்தில் உடற்பயிற்சி கூடம், மருத்துவமனை, வங்கி உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை வணிக வளாகத்தின் கீழ் தரத்தில் இருந்த மின்சார பெட்டியில் இருந்து திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது இதையடுத்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்கும் பனியில் ஈடுபட்டனர். ஆனால் அதிக அளவில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பூந்தமல்லி தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்ததால் தீயானது மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. தனியார் வணிக வளாகத்தில் உள்ள மின்சாதன பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story