தனியார் உணவகத்தில் தீ விபத்து

தனியார் உணவகத்தில் தீ விபத்து

தீ விபத்து

அருப்புக்கோட்டையில் தனியார் உணவகத்தில் திடீர் தீ விபத்தை தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் இனிமை ஹோட்டல் என்ற பிரபல தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பொதுமக்களின் அபிமான உணவகமாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை நேரத்தில் இந்த உணவகத்தின் மாடியில் உள்ள சைனீஸ் உணவு தயார் செய்யும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து தீ பறவி மாடி அறை முழுவதும் மள மளவென தீ பற்றி எரிந்தது.

தீ பற்றி எரிந்ததை அடுத்து உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள் பணியாளர்கள் அனைவரும் அலறி எடுத்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ பற்றி எரிந்த பகுதியில் தண்ணீரைப் பீச்சி அடித்து உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் உணவகத்தில் இருந்த மின்சாதன பொருட்கள், பில் போடும் கம்ப்யூட்டர்கள், டேபிள் சேர்கள் என அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக வாடிக்கையாளர்கள் பணியாளர்கள் அனைவரும் உணவகத்தில் இருந்து உடனடியாக வெளியேறியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதே உணவகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதேபோல் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா? சமையல் அறையில் அதிக வெப்பம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா இல்லை வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர் அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள இது போன்று உணவகங்கள் எந்தவித பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. .

Tags

Next Story