தனியாருக்கு சொந்தமான குடோனில் தீ விபத்து

தனியாருக்கு சொந்தமான குடோனில் தீ விபத்து

மதுக்கரை அருகே நகைபெட்டி தயாரிக்கும் நிறுவனத்தின் குடோனில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

மதுக்கரை அருகே நகைபெட்டி தயாரிக்கும் நிறுவனத்தின் குடோனில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே அறிவொளி நகர் பகுதியில் ரசீது என்பவருக்கு சொந்தமான நகைபெட்டி தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகின்றது.இதில் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகல் நகைபெட்டி தயாரிக்கும் ஆலையின் குடோனில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.இதனையடுத்து குடோன் மற்றும் ஆலையில் இருந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு 4 வாகனங்களில் விரைத்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடோனில் ஏற்பட்ட தீ காரணமாக கரும்புகை வெளியேறி வருகின்றது.இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது.இந்த தீ விபத்து குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story