மத்தியமைச்சரின் பிரச்சார வாகன ஜெனரேட்டரில் தீ விபத்து

மத்தியமைச்சரின் பிரச்சார வாகன ஜெனரேட்டரில் தீ விபத்து

 மயிலாடுதுறை அருகே மத்தியமைச்சரின் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரச்சார வாகனத்தின் ஜெனரேட்டரில் தீ விபத்து உண்டானது. 

மயிலாடுதுறை அருகே மத்தியமைச்சரின் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரச்சார வாகனத்தின் ஜெனரேட்டரில் தீ விபத்து உண்டானது.

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா ,செம்பனார்கோவில் கலைமகள் கல்லூரியில் ,"நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்" , சபத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்வழித்துறை மற்றும் ஆயுஷ்த்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கலந்துகொண்டுள்ளார்.

முன்னதாக கல்லூரி வளாகத்தில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் ,மோடி‌ அரசின் உத்தரவாதம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கிவைத்தார். இந்த வாகனத்தில் பெரிய எல்.இ.டி திரை மூலம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டு ,சிறிது தூரம் கல்லூரி வளாகத்திலேயே வாகனம் சென்று கொண்டிருந்தது.

அப்போது வாகனத்தில் எல்,இ,டி க்காக வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் இருந்து கரும்புகை உருவாகி தீப்பற்ற தொடங்கியது. அருகில் நின்ற தீயணைப்பு துறையினர் ,வாகனத்தை நிறுத்திவிட்டு மேலும் தீ பரவாமல் இருக்க, வாகன ஜெனரேட்டர் மீது நுரை, தீயணைப்பான் மூலம் தீயை அணைத்தனர். அதனை% தொடர்ந்து, வாகனத்தில் இருந்து ஜெனரேட்டர் அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story