சேலத்தில் காலி நிலத்தில் பற்றி எரிந்த தீ

சேலத்தில் காலி நிலத்தில் பற்றி எரிந்த தீ

தீ விபத்து

சேலத்தில் காலி நிலத்தில் பற்றி எரிந்த தீ. பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
சேலம் சொர்ணபுரி விநாயகர் கோவில் தெரு பகுதியில் ஒருவருக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. இந்த நிலத்தில் முட்புதர்கள், செடிகள் அதிகளவில் முளைத்து காணப்படுகிறது. நேற்று இரவு 7 மணியளவில் காலி நிலத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்தவுடன் அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே ஓடிவந்தனர். தீ மளமளவென எரிந்ததால் பக்கத்து வீடுகளுக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்டதால் இதுபற்றி சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story