கல்லூரி வளாகத்தில் தீ விபத்து !

கல்லூரி வளாகத்தில் தீ விபத்து !

தீ விபத்து

ஆத்தூர் அருகே அரசு கல்லூரி வளாகத்தில் தீ விபத்து ஏற்ப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வட சென்னிமலையில் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி செயல் பட்டு வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் புற்கள் காய்ந்து சருகாகி வருகிறது. நேற்று காய்ந்த புற்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கொடுத்த தகவலின் பேரில், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று சுமார் 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து ஆத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story