மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மீன் வியாபாரி பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மீன் வியாபாரி பலி

மீன் வியாபாரி பலி

குளச்சலில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மீன் வியாபாரி பலி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வாணியகுடியை சேர்ந்தவர் சூசைராஜ் மகன் ஜோனி (32). மீன் வியாபாரி. இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. ஆனால் குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ஜோனி வழக்கம்போல் வியாபாரத்திற்கு செல்வதற்காக மோட்டார்சைகளில் வாணியகுடியில் இருந்து முட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் குளச்சல் பள்ளிமுக்கு சந்திப்பு கடந்து சென்றபோது எதிரே குளச்சல் நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக ஜோனியின் மோட்டார் சைக்கிள் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ஜோனி சம்பவ இடத்திலேயே இறந்தார். குளச்சல் போலீச சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறுதி குறித்து ஜோனியின் மனைவி ஜென்சி குளச்சல் . போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோனியின் மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு நிற்க்காமல் சென்ற காரில் பதிவு பண்ணை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story