மொழிப்போர் தியாகிகள்  நினைவுத்தூணிற்கு மலரஞ்சலி

மொழிப்போர் தியாகிகள்  நினைவுத்தூணிற்கு மலரஞ்சலி

மலரஞ்சலி செலுத்தினர் 

  குமாரபாளையம்  மொழிப்போர் தியாகிகள்  நினைவுத்தூணிற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி குமாரபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூணிற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. இதில் மொழிப்போர் தியாகிகள் குறித்து அனைவரும் எடுத்துரைத்தனர்.

பங்கேற்ற அனைவரும் மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர். தி.மு.க மாவட்ட செயலாளர் மதுராசெந்தில், மாவட்ட தி.மு.க பொருளாளர் ராஜாராம், வடக்கு நகர பொறுப்பாளர் நகர்மன்ற த்தலைவர் விஜய்கண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர் .

ஞானசேகரன், எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி தலைவர் மதிவாணன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொறுப்பாளர் சித்ரா உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பு nபெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story