நான்கு வயது பெண் குழந்தை வயிற்றுவலியால் பலி

நான்கு வயது பெண் குழந்தை வயிற்றுவலியால் பலி

பலி

மரக்காணம் அருகே நான்கு வயது பெண் குழந்தை வயிற்றுவலியால் உயிரிழந்தது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் நாணக்கால்மேடு கிராமத்தில் உள்ள விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் வயது 38. இவர் தற்பொழுது மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிராமத்தில் தனது மனைவி ரதிதேவியுடன் குடியிருந்து வருகிறார், இவர்களுக்கு நான்கு வயதில் ரித்திகா பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் ரித்திகாவுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தை ரித்திகாவை மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் ரித்திகாவுக்கு சிகிச்சை அளித்து இதே போல் திரும்ப ஏற்பட்டால் அழைத்து வாருங்கள் என கூறி வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். குழந்தை மாலை 5 மணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனால் பெற்றோர்கள் அனுமந்தையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்த டாக்டர்கள் நீங்கள் குழந்தையை மீண்டும் மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சொல்லுங்கள் என கூறியுள்ளனர். அங்கிருந்து குழந்தையை மரக்காணத்தில் உள்ள அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

அதிர்ச்சியான உறவினர்கள் மரக்காணம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததின் காரணமாக குழந்தை இறந்து விட்டது. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் மீது மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை துவங்கி உள்ளனர். இறந்து போன குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனக செட்டி குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத அறிக்கை கிடைத்த பிறகு இறப்பிற்கு காரணம் தெரியவரும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுகின்றனர்

Tags

Next Story