சங்கரன்கோவிலில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது

சங்கரன்கோவிலில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது

கண் சிகிச்சை முகாம்

புதிய பார்வை அமைப்பு மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து சங்கரன்கோவிலில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய பார்வை அமைப்பு மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் இலவச பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினர். புதிய பார்வை செயலாளர் ராமசாமி, இணைச்செயலாளர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story