மோட்டார் சைக்கிளில் வந்து  ஆடுகளை திருடிய கும்பல்

மோட்டார் சைக்கிளில் வந்து  ஆடுகளை திருடிய கும்பல்

மோட்டார் சைக்கிளில் வந்து  ஆடுகளை திருடிய கும்பல்

கன்னியாகுமரி கிருஷ்ணமங்கலம் பகுதியில் நடந்த ஆடு திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கிருஷ்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வனஜா. தனது வீட்டில் ஆடு வளர்த்து வந்தார். இந்த ஆட்டை வீட்டின் அருகே உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்காக கட்டி இருந்தார். சம்பவத்தன்று இரவு வனஜா வீட்டில் இருந்தபோது ஆட்டின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் வெளியே வந்து பார்க்கும்போது ஆட்டை காணவில்லை. இது தொடர்பாக அப்பதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதில், டிப்டாப் உடைய அணிந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆட்டை திருடி செல்வது தெரிய வந்தது. இது குறித்து தக்கலை போலீசில் வனஜா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டை திருடி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story