கேஸ் சிலிண்டர் வெடித்து குடிசை வீட்டில் தீ விபத்து

கேஸ் சிலிண்டர் வெடித்து குடிசை வீட்டில் தீ விபத்து

பற்றி எரியும் தீ 

செந்துறை அருகே கேஸ் கசிவால் சிலிண்டர் வெடித்ததில் கூரை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து சேதமானது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லகண்ணு. இவரது குடிசை வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் கேஸ் சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் குடிசை வீடு முற்றிலும் தீப்பற்றி எரிந்தது. இந்நிலையில் அருகேயுள்ள ராம்கோ சிமெண்ட் ஆலையிலிருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கபட்டு தீ அணைக்கபட்டது. இதில் வீட்டிலிருந்த மிக்சி, கிரைண்டர், ப்ரிட்ஜ், பீரோவில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவைகள் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த தளவாய் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக வீட்டிற்குள் யாரும் இல்லாதால் உயிர் சேதம் தவிர்க்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Tags

Next Story