இந்தியா கூட்டணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்

இந்தியா கூட்டணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம்

 திமுக

திண்டுக்கல்: இந்த தேர்தல் இரண்டாவது சுதந்திர போர் இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற்கு வாக்களிக்க வேண்டும்.நத்தத்தில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
நத்தத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக துணை பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ. ஐ.பி செந்தில்குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆண்டி அம்பலம், பாலபாரதி, திமுக மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயன், பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, தொகுதி பொறுப்பாளர் தேனி ஜெயக்குமார், வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தத்தை அறிமுகப்படுத்தி அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

Tags

Next Story