தர்மபுரியில் முன்னாள் படை வீரர்கள் குறை கேட்கும் கூட்டம்

தர்மபுரியில் முன்னாள் படை வீரர்கள் குறை கேட்கும் கூட்டம்

பைல் படம்

தர்மபுரி மாவட்டத்தில் வருகின்ற 26 ஆம் தேதி முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்ட மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவத,- முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் முன்னாள் படைவீரர்கள் சார்ந் தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி மாலை 4 மணிக்கு தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறையில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து பேசுகின்றனர். எனவே சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் கூட்டத்தின்போது முன்னாள் படைவீரர் கள், அவரை சார்ந்தோர் மற்றும் படையில் பணிப்புரிந்து வருவோரது குடும்பத்தினர் அவர்களது கோரிக்கையினை தனித்தனி மனுக்களாக எழுதி அடையாள அட்டை நகலுடன் இரட்டை பிரதிகளில் கலெக்ட ரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story