சிவகாசி அருகே சாலை விபத்தில் உயிர் இழந்த ஆட்டு வியாபாரி !!!

சிவகாசி அருகே சாலை விபத்தில் உயிர் இழந்த ஆட்டு வியாபாரி !!!
பலி
சிவகாசி அருகே தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஆட்டு வியாபாரி உயிரிழப்பு.
சிவகாசி அருகே தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஆட்டு வியாபாரி உயிரிழப்பு விருதுநகர் மாவட்டம், சிவகாசிஅருகே சல்வார்பட்டியைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி கருப்பசாமி(55) இவர் சாத்தூர் - மேட்டமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் ராஜபாளையத்திலிருந்து சாத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த சாத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த கருப்பசாமியின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story