இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் ஒருவர் காயம்

இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் ஒருவர் காயம்

விபத்து 

இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் ஒருவர் காயம்.
திருப்போரூர் - கேளம்பாக்கம் ஓ.எம்.ஆர்., சாலையில், காலவாக்கத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி ராஜலிங்கம், 56, என்பவர், இருசக்கர வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது, செங்கண்மால் பகுதியில் சாலையை முறையாக சீரமைக்காததால், இருசக்கர வாகனத்தின் வேகத்தை திடீரென குறைத்துள்ளார். அதேநேரத்தில், இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து வந்த அரசு பேருந்து, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காய்கறி வியாபாரி வாகனத்திலிந்து கீழே விழுந்து, வலது கையில் காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். உடனே, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த வியாபாரியை மீட்டு, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அரசு பேருந்தில் பயணித்த பயணியர், மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பட்டனர். இதுகுறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story