நடந்து சென்ற மூதாட்டி மீது அரசு பேருந்து மோதி விபத்து

நடந்து சென்ற மூதாட்டி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளனதில் படுகாயம் அடைந்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, புத்தாாம்பூர், குடி தெருவை சேர்ந்தவர் மருதையன் மனைவி கௌசல்யா வயது 64. இவர் பிப்ரவரி 26 ஆம் தேதி இரவு 7:30 மணி அளவில் அருகில் உள்ள மணல்மேடு பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த அரசு பேருந்து, நடந்து சென்ற மூதாட்டி கௌசல்யா மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த கௌசல்யாவுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால்,

உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த கௌசல்யாவின் மகள் ரேவதி வயது 45 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அரசு பேருந்தை ஓட்டி வந்த,

தேனி மாவட்டம், வீரபாண்டி, பஜார் தெருவை சேர்ந்த ராஜபாண்டியன் வயது 57 என்பவர் மீது, பேருந்தை கவனக்குறைவாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக, வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story