சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து !

சாலையை கடக்க முயன்றவர்கள்  மீது அரசு பேருந்து மோதி விபத்து !

 விபத்து

பல்லடம் அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அரசு பேருந்து மோதிய விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம்அருகே சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து. விபத்தில் பாட்டி கனகம்மாள்(60),பேரன் ஹரிஹரசுதன்(4),பேத்தி லபஷா ஜோதி(7) மூவர் படுகாயம் - விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கே.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் கனகம்மாள் (60).தனது கணவர் உயிரிழந்த நிலையில் மகள் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இவர் தனது பேரன் ஹரிஹரசுதன்(4),பேத்தி லபஷா ஜோதி(7) ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற பொழுது கோவையில் இருந்து 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொடிருந்த அரசு பேருந்து இவர்கள் மீது மோதியது. பேருந்து மோதியதில் மூவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தினை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்தில் படுகாயம் அடைந்த மூவருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் பேருந்து ஓட்டுநர் பால் பீட்டர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story