தற்காலிக டிரைவர் ஓட்டிச்சென்ற அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து

தற்காலிக டிரைவர் ஓட்டிச்சென்ற அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து

விபத்துக்குள்ளான அரசு பேருந்து 

திண்டிவனத்தில் தற்காலிக டிரைவர் ஓட்டிச்சென்ற அரசு பஸ் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக பயணிகள் காயமின்றி தப்பினர்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், தற்காலிக டிரைவர்களை கொண்டு, பஸ்கள் இயக்கப்பட்டது. அந்த வகையில், திண்டிவனத்தில் இருந்து மேல்மலையனூருக்கு சென்ற அரசு பஸ்சை தற்காலிக டிரைவர் இருதயராஜ் ( 42) என்பவர் ஓட்டினார். பஸ், செஞ்சியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே வந்த போது திடீரென எதிரே வந்த மினி லாரி மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. பஸ்சில் பயணித்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினார்கள். இதுகுறித்து செஞ்சி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story