வெள்ளிச்சந்தை அருகே பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

வெள்ளிச்சந்தை அருகே பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கோப்பு படம் 

வெள்ளிச்சந்தை அருகே பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே வெள்ளமோடி பகுதியை சேர்ந்தவர் மதியழகன் மகன் சுபின் சபரி (23). முதுநிலை பட்டதாரி. இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதமாக சுபின் சபரி வயிற்றுவலியால் அவதிபட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும்,

நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை எடுத்துள்ளார். எனினும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லா நேரத்தில் ஃபேனில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுபின் சபரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story