கூரை கொட்டகையை உடைத்த யானை கூட்டம்; உயிர் தப்பிய தொழிலாளர்கள்!

கூரை கொட்டகையை உடைத்த யானை கூட்டம்; உயிர் தப்பிய தொழிலாளர்கள்!

பெரியநாயக்கன்பாளையம் அருகே கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர செட்டுகளை யானைகள் உடைத்த நிலையில், அதிர்ஷவசமாக அங்கிருந்தவர்கள் உயிர் தப்பினர்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர செட்டுகளை யானைகள் உடைத்த நிலையில், அதிர்ஷவசமாக அங்கிருந்தவர்கள் உயிர் தப்பினர்.

கோவை மாவட்டத்தில் உள்ள வனக்கோட்டத்தில் மதுக்கரை,போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம்காரமடை, மேட்டுப்பாளையம் , சிறுமுகை உள்ளிட்ட 7 வனச்சரங்கள் உள்ளன. இவை அனைத்தும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் எப்போதும் இந்த பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் காணப்படும். குறிப்பாக நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால் மூன்று மாதங்களுக்கு கோவை வனக்கோட்டத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

இவ்வாறு வலசை செல்லும் நூற்றுக்கணக்கான யானைகள் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியான சிறுமுகை பகுதிக்கு வந்து பின்னர் அங்கிருந்து நீலகிரிக்கும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கும் பிரிந்து செல்வது வழக்கம்.ஆண்டுதோறும் யானைகளின் வலசை காலம் மூன்று மாதங்கள் மட்டும் இருந்தாலும் யானைகள் வலசை சென்றாலும் குறிப்பிட்ட வனக்கோட்டங்களில் வனக்கோட்டத்தில் வனச்சரகத்தில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும் இந்த யானைகள் அதே பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சாப்பிடுவதும் ஒரு சில யானைகள் வனத்திற்கு உள்ளே தங்கி இருப்பதுமாக உள்ளது. இந்த நிலையில் கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரத்தில் உள்ள மூன்று யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய பயிர்களை சாப்பிடாமல் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. மூன்று யானைகளும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கதிர் நாயக்கன்பாளையம் பகுதிக்குள் நுழைந்து அங்கு கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர செட்டுகளை உடைத்து மூன்று யானைகளும் அரிசியை தேடியது.இதனை கண்ட ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் உயிர் பயத்தால் உள்ளேயே பதுங்கிக்கொண்ட நிலையில் எதிர் வீட்டில் குடியிருக்கம் தொழிலாளர்கள் எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியே வரும்படி அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஒரு தொழிலாளி மட்டும் தகர கொட்டைகள் இருந்து வெளியே ஓடியபோது அவரை ஆண் யானை தாக்க முன்ற நிலையில் யானையிடம் இருந்து தப்பித்தவர் குடியிருப்புகள் தஞ்சம் அடைந்தார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ள நிலையில் தற்போது இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் மூன்று யானைகளும் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புகளை மட்டுமே குறி வைத்து அரிசி மற்றும் மாட்டு தீவனங்களை சாப்பிடுவதாகவும் ஊருக்குள் புகுந்தால் விவசாய பயிர்களை மட்டும் சேதப்படுத்துவதோடு வனத்துறையினர் வந்து இந்த யானைகளை விரட்டினாலும் இந்த யானைகள் பயப்படுவதில்லை என்றவர்கள் நீதிமன்ற உத்தரவை காட்டி பட்டாசு வெடித்து யானைகளை விரட்டவும் வனத்துறையினர் தயங்குவதாக தெரிவித்தனர்.

Tags

Next Story