வீட்டினுள் நுழைந்த யானை கூட்டம்;.உயிர் தப்பிய குடும்பத்தினர்.

வீட்டினுள் நுழைந்த யானை கூட்டம்;.உயிர் தப்பிய குடும்பத்தினர்.

தடாகம் அடுத்த தெப்பனூர் கிராமத்தில் வீட்டுக்குள் நுழைந்த யானை கூட்டத்திடமிருந்து பத்திரமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். 

தடாகம் அடுத்த தெப்பனூர் கிராமத்தில் வீட்டுக்குள் நுழைந்த யானை கூட்டத்திடமிருந்து பத்திரமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த பன்னிமடை பகுதியில் தெப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்த்.பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. நேற்று பணிகள் முடிந்தவிட்டு வீடு திரும்பிய வசந்த் குடும்பத்தினருடன் டி.வி பார்த்து கொண்டுருந்தார்.இரவு 9 மணி அளவில் ஊருக்குள் யாணைகள் புகுந்துள்ளதாக கிடைக்கபெற்ற தகவலை அடுத்து வீட்டின் கதவுகளை மூடி சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் அருகே வந்த மூன்று யானைகளில் ஒரு யானை 10அடி அகலம் உள்ள வீட்டின் ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளது.இதனை அடுத்து வசந்த் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் அருகில் உள்ள படுக்கை அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் வீட்டிற்குள் இருந்த யானை உணவுப் பொருட்களை தேடியுள்ளது.இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் சத்தம் எழுப்பியும் பட்டாசு வெடித்தும் யானையை வீட்டிற்குள் இருந்து வெளியே விரட்டினர்.

பின்னர் மூன்று யானைகளையும் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேற்றி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர் இதுகுறித்து வசந்த் கூறுகையில் வரப்பாளையம் வனப்பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வந்த நிலையில் தற்போது குடியிருப்புக்குள் நுழைந்துள்ளது எனவும் படுக்கை அறைக்குள் பதுங்கியதால் உயிர்த்தப்பியதாக கூறினார்.யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களில் புகுந்து விளைபொருட்களை சேதப்படுத்துவதாகவும் இதனை கட்டுப்படுத்த வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்து வருவதாகவும் யானைகள் ஊருக்குள் நுழைவது தொடர்கதை ஆகிவிட்டதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

Tags

Next Story