வெயிலிலும் அனல் பறக்கும் பிரச்சாரம் !

வெயிலிலும் அனல் பறக்கும் பிரச்சாரம் !

பாஜக

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தொகுதி, வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் ஜோதிமணி கடும் வெயிலையும் பொருட்படுத்தாது தமது அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்குகளை தோலுரித்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு கிராமங்களிற்கும் சென்று நாட்டை சூழவிருக்கும் அபாயத்தினை விளக்கி அதை போக்கும் பொருட்டு செல்வி ஜோதிமணி கைச்சின்னத்திற்கு வாக்குகள் கேட்டது மக்களிடையை பலத்த வரவேற்பினை பெற்றது. அய்யலூர் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் இந்திய கூட்டணியின் கரூர் பாராளுமன்ற வேட்பாளர் ஜோதிமணியை எதிர்பார்த்து மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாது நாலா திசைகளிலிருந்தும் மக்கள் சாரை சாரையாக வந்து குவிந்தபடியிருந்தனர். வெயிலின் கொடுமையிலிருந்து மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அய்யலூர் பேரூர் திமுக சார்பில் பெரியதொரு நிழல் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

Tags

Next Story