விருதுநகர் அருகே வீட்டில் இருந்த நகை மாயம்

விருதுநகர் அருகே  வீட்டில் இருந்த நகை மாயம்
காவல் நிலையம்
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை ஈபி காலணியில் வீட்டில் இருந்த நகை மாயமனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
விருதுநகர் அருகே சூலக்கரை தாதம்பட்டி கோட்டை சார்ந்தவர் முத்து வயது 63 இவர் கனரா வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருப்பதாகவும், இவர் வீட்டில் இவரும் இவர் மனைவியும் வசித்துவரும் நிலையில் வீட்டில் பீரோவில் இருந்த இரண்டு லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான எட்டரை பவுன் எடையுள்ள தங்க நகைகள் மாயமானதாகவும், இவர்கள் வீட்டில் இருந்த நிலையில் நகை எங்கு போனது என தெரியாமல் நகையை கண்டுபிடித்து தரக்கோரி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புகாரின் அடிப்படையில், சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story