வாலிபருக்கு கத்தி வெட்டு - ஊராட்சி மன்ற தலைவருக்கு வலை

வாலிபருக்கு கத்தி வெட்டு -  ஊராட்சி மன்ற தலைவருக்கு வலை

சரவணன் 

செய்யாறு அருகே கடுகனூர் கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பரிசு கூப்பனை பறித்து சென்றது குறித்து அனைவருக்கும் தகவல் தெரிவித்த வாலிபரை கத்தியால் வெட்டிய ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கடுகனூர் பகுதியில் நேற்று கூட்டுறவு சங்கம் சார்பில் பொங்கல் பரிசு கூப்பன் விநியோகம் செய்த போது ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமார் கூட்டுறவு சேல்ஸ்மேனிடம் பட்டியலை பிடுங்கி 10 க்கும் மேற்பட்டோருக்கு கூப்பன்கள் பிடுங்கி சென்ற சம்பவத்தில் அனைவருக்கும் தகவல் தெரிவித்தாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் கத்தியால் வெட்டியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story