கொண்டலாம்பட்டி அருகே வெள்ளிப்பட்டறை தொழிலாளி தற்கொலை

கொண்டலாம்பட்டி அருகே வெள்ளிப்பட்டறை தொழிலாளி தற்கொலை

கோப்பு படம்

கொண்டலாம்பட்டி அருகே வெள்ளிப்பட்டறை தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரிய புத்தூர் சந்தனக்காரன் காட்டை சேர்ந்தவர் சிவா (வயது 37), வெள்ளி பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் சின்ன புத்தூரில் குடும்பத்துடன் குடியிருந்து வந்த சிவா கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி சரஸ்வதியிடம் தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் மனைவியை பிரிந்து சென்று, சந்தனக்காரன் காட்டில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கே மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த சிவா வீட்டில் உள்ள இரும்பு குழாய் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் விட்டத்தில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story