துருப்பிடித்து வீணாகும் மின்விளக்கு கம்பம்

துருப்பிடித்து வீணாகும் மின்விளக்கு கம்பம்

சாலையில் போடப்பட்டுள்ள மின்விளக்கு கம்பம் 

சாலையோரம் போடப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு கம்பம், மண்ணில் புதைந்து துருப்பிடித்து வீணாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், முக்கிய சாலை சந்திப்புகளில், இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம் தேனம்பாக்கம் ரோடு, கோகுலம் வீதியில், சாலையோரம் போடப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு கம்பம், மண்ணில் புதைந்து துருப்பிடித்து வீணாகி வருகிறது. இந்த மின்கம்பத்தை, காஞ்சிபுரம்நகரில், போதுமான வெளிச்சம் இல்லாத முக்கிய சந்திப்புகளில் பொருத்த, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story