குடும்பப் பிரச்சினையால் மனைவியை பிரிந்து வாழ்ந்த வழக்கறிஞர் தற்கொலை

குடும்பப் பிரச்சினையால் மனைவியை பிரிந்து வாழ்ந்த வழக்கறிஞர் தற்கொலை

தற்கொலை செய்து கொண்டவர்

திருவட்டார் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவட்டார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பிர சாத் (50). இவர் தக்கலை கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். பிரசாத்துக்கு திருமணமாகி ரெத்தினாம்பிகா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். மகள் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.இந்த நிலையில் மதுவுக்கு அடிமையான பிரசாத் அதில் இருந்து மீளமுடியாமல் தவித்தார்.

இதனால் அவருக்கும்,ரெத்தினாம்பிகாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற் பட்டு வந்தது. இதையடுத்து அவர் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாகவசித்து வந்தார்.மனைவி அவரது பெற்றோர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரசாத் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே பிரசாத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் பரிசோ தித்து பார்த்தபோது பிரசாத் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது மனைவி ரெத்தினாம்பிகா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலிசார் வழக்கு பதிவு செய்து பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story