தீ பிடித்து எரிந்த மின் விளக்கு கம்பம்

ராயபுரத்தில் மின் விளக்கு கம்பம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சென்னை ராயபுரத்தில் உள்ள எம்.சி சாலையில் உள்ள ஒரு தெரு மின் விளக்கு கம்பத்தில் நேற்று இரவு குறைந்த மின்னழுத்தம் காரணமாக திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனாலும் கூட அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags

Next Story