சங்கரன்கோவில் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

சங்கரன்கோவில் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
சங்கரன்கோவில் அருகே கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
சங்கரன்கோவில் அருகே கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள குருக்கள்பட்டி பகுதியில் உள்ள திருநெல்வேலி நெடுஞ்சாலையில் கங்கைகொண்டான் பகுதியில் இருந்து கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரியானது சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து விபத்தைக் கண்டவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த அவர்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து லாரி ஓட்டுநர் சொள்ளமுத்து படுகாயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வீட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் என்பதால் வெடி விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என தீயணைப்பு துறை வீரர்கள் கேஸ் சிலிண்டரில் லீக் ஏதும் உள்ளதா என ஆராய்ந்து பின்னர் மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு அனைத்து கேஸ் சிலிண்டர்களும் சங்கரன்கோவில் நோக்கி கொண்டு செல்லப்பட்டன. மேலும் இந்த விபத்து குறித்து பனவடலிசத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Tags

Read MoreRead Less
Next Story