ராசிபுரம் அடுத்த இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

ராசிபுரம் அடுத்த இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

விபத்தில் சிக்கிய லாரி

ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பை - பாஸ் பகுதியில் 17 டன் இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

17 டன் இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வல்லரசு. இவர் பாண்டிசேரியில் இருந்து 17 டன் கம்பியை லாரியில் ஏற்றிக் கொண்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பை - பாசில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டேரிங் லாக் ஆனதால், சாலையோரம் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் வல்லரசு, கிளினர் பசுபதி ஆகியோர் உயிர் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story