வந்தவாசி அருகே மாணவியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர்

வந்தவாசி அருகே மாணவியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர்

கோப்பு படம்


திருவண்ணாமலை வந்தவாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அதே கிராமத்தை லாரி டிரைவர் உறவினர் என்பதால் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார்.

இதனால் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாணவியை செங்கல்பட்டு அரசு மருத் துவமனைக்கு அழைத்துச சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்திற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. மேலும் மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story