அரைகுறையாக மூடிய பள்ளத்தில் சிக்கிய லாரி

அரைகுறையாக மூடிய பள்ளத்தில் சிக்கிய லாரி

அரைகுறையாக மூடிய பள்ளத்தில் சிக்கிய லாரி

சோளிங்கர் பகுதியில் அரைகுறையாக மூடப்பட்ட பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட போர்டின்பேட்டை, பாட்டிக்குளம் பகுதி ஒருவழிச்சாலையாக உள்ளது. இங்கு கேபிள் புதைப்பதற்காக ஆங்காங்கே சிறு பள்ளங்கள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்தபின் அவசர கோலத்தில் அரை குறையாக அந்த பள்ளங்கள் மூடப்பட்டன. அதன்கீழ் பதிக்கப்பட்ட குடிநீர் குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்ததால் தண்ணீர் கசிந்ததில், பள்ளம் தோண்டிய இடங்கள் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

இந்த நிலையில் அந்த வழியாக சென்ற லாரி திடீரென பள்ளத்தில் சிக்கியது. இதனால் சோளிங்கர்-திருத்தணி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு வாகனங்கள் உத வியுடன் லாரியை ஓரமாக நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். அவசர கோலத்தில் மூடப்பட்ட பள்ளத்தை முறையாக சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story