வழி தவறி சென்ற மூதாட்டி, அவரது மகனிடம் ஒப்படைப்பு

வழி தவறி சென்ற மூதாட்டி,  அவரது மகனிடம் ஒப்படைப்பு

மூதாட்டி அவரது மகனிடம் ஒப்படைப்பு

செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்தகளத்துார் சாலை வ. உ. சி. , நகரில், வயது மூப்பு காரணமாக, சரியாக பேச முடியாமலும் நடக்க முடியாமலும், மூதாட்டி ஒருவர் அவதிப்படுவதாக, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூதாட்டியை மீட்டு, அவரது பையில் ஏதாவது முகவரி உள்ளதா என சோதனை செய்தனர். அதில், சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த மூதாட்டியின் மூத்த மகனின் முகவரி கண்டுபிடிக்கப்பட்டது. தொலைபேசி எண் ஏதுமில்லாததால், ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட முகவரிக்கு போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மூதாட்டி சுந்தரி பாய், 80, என்பதும், செங்கல்பட்டு கற்பூரசெட்டிகுளம் பகுதியில் உள்ள தன் இரண்டாவது மகன் வெங்கடேஷ் பாட்ஷா, 60, வீட்டிற்கு சென்றபோது வழிதவறியதும் தெரியவந்தது. அதையடுத்து, வெங்கடேஷ் பாட்ஷா வரவழைக்கப்பட்டு, மூதாட்டி சுந்தரிபாயை போலீசார் அவரிடம் ஒப்படைத்தனர். பல இடங்களில் தொடர்பு கொண்டு, மூதாட்டியை உரியவர்களிடம் ஒப்படைக்க, மூன்று மணி நேரம் போராடிய செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஏட்டு வெங்கடேசனை, அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்து பாராட்டினர்.

Tags

Next Story