பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்!

கோப்பு படம்

பேரணாம்பட்டு அருகே பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி மேல்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே நாவிதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவரது மகள் காவ்யாவை (19). கடந்த 4-ந் தேதி முதல் காணவில்லை. இது குறித்து மேல்பட்டி காவல் நிலையத்தில் சங்கர் கணேஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வந்தார்.

இதனிடையே காவ்யாவும் அதே கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர் மகன் ஜீவராஜ் (23) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் தேடுவதையறிந்த காவ்யா தனது காதல் கணவர் ஜீவராஜுடன் மேல்பட்டி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

போலீஸ் விசாரணையில் காவ்யா கூறுகையில், ‘‘தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி காதலன் ஜீவராஜுடன் சென்றதாகவும், ஆம்பூர் அருகே வீரக்கோவில் பகுதியில் அவர் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்றும் தெரிவித்தார். இருவரும் மேஜர் என்பதால் போலீசார் அறிவுரை கூறி காவ்யாவை கணவர் ஜீவராஜீடன் அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story