காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

காதல் ஜோடி

சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருடைய மகள் பிருந்தா (வயது 20). இவரும் தீவட்டிப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (24) என்பவரும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இது பற்றி இரு வீட்டாரின் பெற்றோர்களுக்கும் தெரிய வரவே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி நேற்று பண்ணப்பட்டி முனியப்பன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி, காதல் ஜோடியின் பெற்றோரை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story