திண்டுக்கல்லில் வீட்டிற்குள் புகுந்த கட்டு வீரியன் பாம்பு உயிருடன் மீட்பு

திண்டுக்கல்லில் வீட்டிற்குள் புகுந்த கட்டு வீரியன் பாம்பு உயிருடன் மீட்பு

மீட்கப்பட்ட கட்டுவிரியன் பாம்பு

திண்டுக்கல் வ.வு.சி நகரில் வீட்டிற்குள் புகுந்த கட்டு வீரியன் பாம்பு தீயணைப்புத்துறை உதவியுடன் பிடித்தனர்.

திண்டுக்கல் மாநகராட்சி 14.வது வார்டுக்குட்பட்ட YMR.பட்டி, வ.வு.சி நகரில் வசிக்கும் தனம் என்பவர் வீட்டில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3:45 மணிக்கு வீட்டில் பாம்பு வந்துள்ளது. இதை கண்ட தனம் அலறி அடித்துக் கொண்டு மாமன்ற உறுப்பினர் தனபாலன் அவர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே தனம் வீட்டிற்கு வந்த தனபாலன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் தெரிவித்த சிறிது நேரத்திலேயே திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து நான்கு அடி நீளம் கொண்ட கட்டுவீரியன் பாம்பை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி திறமையாக செயல்பட்டு பிடித்து சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story