கஞ்சா விற்பனை ஈடுபட்ட ஒருவர் கைது

கஞ்சா விற்பனை ஈடுபட்ட ஒருவர் கைது
கஞ்சா விற்பனை ஈடுபட்ட ஒருவர் கைது
ராஜபாளையம் யூனியன் அலுவலகம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிபவர் முத்துக்குமரன் இவர் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட யூனியன் அலுவலகம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு இருந்த முனியாண்டி என்பவர் கஞ்சா விற்பனை ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்த ஒரு கிலோ 250 கிராம் பை பறிமுதல் செய்த காவல்துறையினர் விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story