குலசேகரப்பட்டினம் அருகே திருமண மண்டபத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

குலசேகரப்பட்டினம் அருகே  திருமண மண்டபத்தில் ஒருவர் வெட்டிக் கொலை

கோப்பு படம் 

குலசேகரப்பட்டினம் அருகே திருமண மண்டபத்தில் உணவு பரிமாறும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள சிறுநாடார் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன் மகன் செந்தில்குமார் (55). அதே கிராமத்தை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் துரைப்பாண்டி (64). இவர்கள் இருவரும் உறவினர்கள், நேற்று அங்குள்ள திருமண மண்டபத்தில் நடந்த பூபுனித நீராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்களாம்.

இந்நிலையில் சாப்பாடு பரிமாறும்போது செந்தில்குமார் - துரைப் பாண்டி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த துரைப்பாண்டி செந்தில்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினாராம்.

இதில் பலத்த காயம் அடைந்த செந்தில்குமாரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து குலசேகரப்பட்டினம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்கு பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமண மண்டபத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story